தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்.24-ஆம் தேதி காலை 10 மணிக்கு அரசுத் துறை ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தீர்வு
காண்பதற்கு வாய்ப்பாக, அரசுத் துறையில் பணியாற்றி
ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் தங்களது குறைபாடு மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுக்களை, செப்.18-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர், ஆட்சியர் அலுவலகம், தேனி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.