ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை: தேனி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

ஆண்டிபட்டி அருகே மூணாண்டிபட்டியில் குடும்பப் பிரச்னையில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு

Updated On :23 ஜனவரி 2019, 7:39 am IST

ஆண்டிபட்டி அருகே மூணாண்டிபட்டியில் குடும்பப் பிரச்னையில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
மூணாண்டிபட்டியைச் சேர்ந்தவர் ராசு மகன் ஜெயக்குமார் (26). இவரது மனைவி அதே ஊரைச் சேர்ந்த தவசி மகள் பவித்ரா. ஜெயக்குமார், பவித்ரா ஆகியோருக்கு இடையே குடும்பப் பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 
 இப் பிரச்சனையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி தனது வீட்டில் இருந்து தந்தை வீட்டுக்கு வந்த பவித்ரா, அங்கு விஷ மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்றார்.
ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பவித்ரா, அங்கு சிகிச்சை பலனின்றி அதே ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிந்து, மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக ஜெயக்குமாரை கைது செய்தனர்.
 இந்த வழக்கு விசாரணை தேனி மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.திலகம், மனைவியை தற்கொலைக்கு தூண்டிய ஜெயக்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.