பெரியகுளத்தில் நீரில் மூழ்கி இளைஞர் சாவு
By DIN | Published On : 04th April 2019 07:40 AM | Last Updated : 04th April 2019 07:40 AM | அ+அ அ- |

பெரியகுளம் கண்மாயில் தாமரைப் பூ பறிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெரியகுளத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(33). இவர் குளம் மற்றும் கண்மாய் பகுதிகளில் இருந்து தாமரைப் பூக்களை பறித்து விற்பனை செய்து வந்தார். இவர் திங்கள்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பெரியகுளம் கண்மாயில் அவர் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் அவரது சடலத்தை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.