ஒட்டன்சத்திரம் நகராட்சியில் திமுக வேட்பாளர் ப.வேலுச்சாமி வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ப.வேலுச்சாமி ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள கே.கே.நகர், நாகணம்பட்டி, ஏபி காலனி, சிக்கந்தர் நகர், கருவூல காலனி, சொசைட்டி காலனி, சம்சுதீன் காலனி, காந்தி நகர், திடீர் நகர், விஸ்வநாத நகர், சாஸ்தா நகர், நல்லாக்கவுண்டன்நகர், திருவள்ளுவர் சாலை, மேட்டுப்பட்டி, தும்மிச்சம்பட்டி, புதூர், சத்யாநகர், ஏபிபி நகர், பழனிக்கவுண்டன்புதூர், குறிஞ்சி நகர், ஆத்தூர், வ.உ.சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிப்பில் ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவை உறுப்பினர் அர.சக்கரபாணி,திமுக நகரச் செயலர் ப.வெள்ளைச்சாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் வீ.கண்ணன், ப.ஆறுமுகம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் க.பாண்டியராஜன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.