போடியில் சொத்து பிரச்னையில் அக்காவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, தங்கை கணவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
மதுரை அவனியாபுரம் ஜவஹர் நகரைச் சேர்ந்தவர் தனபாக்கியம் (48). இவருக்கு உடன் பிறந்தவர்கள் 5 பேர். இதில், காஞ்சனா (44) என்பவர் போடியில் வசித்து வருகிறார். இவரது கணவர் ராஜவேல் (50). இந்நிலையில், இவர்கள் தங்களுக்குச் சொந்தமான சொத்தைக் காண்பித்து, கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த தனபாக்கியம், போடிக்கு வந்து சொத்தின் மூல பத்திரத்தை கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில், ராஜவேல் மற்றும் காஞ்சனா ஆகியோர் சேர்ந்து தனபாக்கியத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த தனபாக்கியம், தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த புகாரின்பேரில், காஞ்சனா, ராஜவேல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த போடி நகர் காவல் நிலைய போலீஸார், ராஜவேலை கைது செய்தனர்.