தேனியிலுள்ள சடையாள் கோயிலில் சித்தர்கள் மரபு வழி மார்க்க மக்கள் பேரவை மற்றும் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் ஆகியன சார்பில், மழை வேண்டி யாகம் மற்றும் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சித்தர்கள் மரபு வழி மார்க்க மக்கள் பேரவை பொதுச் செயலர் ஸ்ரீராஜா சுவாமி தலைமையில் நடைபெற்ற யாகம் மற்றும் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியில், கிராமக் கோயில் பூசாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.