வீரபாண்டியில் ஆக.20 இல் கல்லூரி  மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

வீரபாண்டி, சௌராஷ்டிரா கல்வியியல் கல்லூரியில் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பா நினைவாக ஆகஸ்ட் 20 ஆம் தேதி காலை

வீரபாண்டி, சௌராஷ்டிரா கல்வியியல் கல்லூரியில் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பா நினைவாக ஆகஸ்ட் 20 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடைபெறுகிறது. 
தேனீ கலை இலக்கிய மையம், வைகை அரிமா சங்கம், மாவட்ட கட்டட பொறியாளர் நலச் சங்கம், கணேசபுரம் விவேகானந்தா- நேதாஜி டிரஸ்ட் ஆகியவை இணைந்து இப்போட்டியை நடத்துகின்றன. ஒரே கல்லூரியில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்கலாம்.
போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.5,000, 2 ஆம் பரிசு ரூ.3,000, 3 ஆம் பரிசு ரூ.2,000 வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது கல்லூரி முதல்வரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று t‌h‌e‌n‌i‌k‌i‌m​a‌i‌y​a‌m என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தேனீ கலை இலக்கிய மைய செயலர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com