தேனி அருகே அரண்மனைப்புதூர், விநாயகர் கோயில் தெரு அங்கன்வாடி மையத்தில் சுந்திர தின விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை குழந்தைகளுக்கு கலைப் போட்டிகள் நடைபெற்றது.
அங்கன்வாடி மைய அமைப்பாளர் ப.ரோஜா தலைமையில் குழந்தைகளுக்கு மாறுவேடம், பாட்டு மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு அங்கன்வாடி மைய உதவியாளர் முருகேஸ்வரி நன்றி கூறினார்.