சுருளி அருவியில் 5 நாள்கள் இடைவெளிக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 7 ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
தற்போது மழை குறைந்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கும் குறைந்துள்ளது.
இதனால், செவ்வாய்க்கிழமை முதல் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சாரல் மழையில் நனைந்தவாறு அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.