சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

சுருளி அருவியில் 5 நாள்கள் இடைவெளிக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் செவ்வாய்க்கிழமை முதல்  மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

சுருளி அருவியில் 5 நாள்கள் இடைவெளிக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் செவ்வாய்க்கிழமை முதல்  மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
 தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 7 ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
தற்போது மழை குறைந்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கும் குறைந்துள்ளது. 
இதனால், செவ்வாய்க்கிழமை முதல் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சாரல் மழையில் நனைந்தவாறு அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com