தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி பிற்பகல் 4 மணிக்கு சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எண்ணெய் எரிவாயு நிறுவனங்களின் அலுவலர்கள் மற்றும் முகவர்கள் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள், நுகர்வோர் நடவடிக்கை குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் உள்ள குறைபாடுகள், புதிய எரிவாயு உருளை பெறுவதில் உள்ள சிரமம் ஆகியவை குறித்து மனு அளித்து தீர்வு காணலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.