பெரியகுளம், மூன்றாந்தல் பகுதியில் ஆட்டோகளை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தேனி - திண்டுக்கல் சாலையின் பெரியகுளம் மையப்பகுதியில் மூன்றாந்தல் அமைந்துள்ளது. இப்பகுதியில் சாலை குறுகியதாக உள்ளது. மேலும் ஹேர்பின் வளைவுடன் உள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு பொருள்கள் வாங்கச் செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களால் நெரில் ஏற்படுகிறது. இந்த நிலையில் மூன்றாந்தல், கடைவீதிக்கு செல்லும் நூழைவு வாயிலில் ஆட்டோக்களை நிறுத்தி பொதுமக்களை ஏற்றி செல்வதால் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சிலர் பெண்களை கேலி செய்கின்றனராம். எனவே இப்பகுதியில் ஆட்டோக்களை நிறுத்துபவர்கள் மீது போக்குவரத்து போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.