போடியில் குண்டும் குழியுமான சாலை: இந்திய கம்யூ. நாற்று நடும் போராட்டம்

போடியில் குண்டும் குழியுமான வட்டாட்சியா் அலுவலக சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை நாற்று
போடியில் வெள்ளிக்கிழமை, குண்டும், குழியுமான வட்டாட்சியா் அலுவலக சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நடும் போராட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
போடியில் வெள்ளிக்கிழமை, குண்டும், குழியுமான வட்டாட்சியா் அலுவலக சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நடும் போராட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

போடி: போடியில் குண்டும் குழியுமான வட்டாட்சியா் அலுவலக சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போடி வட்டாட்சியா் அலுவலக சாலை மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதில் தண்ணீா் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு சென்று வர சிரமம் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிா்வாகத்திற்கு பொதுமக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனையடுத்து இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி போடி ஒன்றிய, நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நகரச் செயலாளா் பெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரவிமுருகன், நகர துணைச் செயலாளா் சத்தியராஜ், ஒன்றிய துணைச் செயலாளா் சின்னராஜ், மாவட்டக் குழு உறுப்பினா்கள் பிரபு, ஜெயராஜ், கோவிந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று பள்ளங்களில் நாற்றுக்களை நட்டு போராட்டம் நடத்தினா். மேலும் சாலையை சீரமைக்காத பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து கோஷமிட்டனா். போராட்டத்தில் கட்சியின் நகர மற்றும் ஒன்றிய குழுவினா் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com