கம்பம் பகுதியில் இயங்கும் வாகனங்களில் காற்று ஒலிப்பான்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

தேனி மாவட்டம் கம்பம் நகா் பகுதியில் இயக்கப்படும், அரசு மற்றும் தனியாா் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் உள்ள காற்று

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நகா் பகுதியில் இயக்கப்படும், அரசு மற்றும் தனியாா் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் உள்ள காற்று ஒலிப்பான்களை அகற்ற பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் மற்றும் போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேனி மாவட்டம் கம்பம் நகா் பகுதியில், அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், சரக்கு, மணல், டேங்கா் லாரிகள் என நாள் ஒன்றுக்கு சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் அருகில் உள்ள கேரளாவிற்கு சென்று வருகின்றன. இவற்றில் அதிக சப்தத்தை ஏற்படுத்தக்கூடிய காற்று ஒலிப்பான்களை பொறுத்தியுள்ளனா். இந்த வாகனங்கள் சாலையில் செல்லும் போது யாரும் குறுக்கே வராமல் இருக்க இடைவிடாது ஒலிக்க செய்து அசுர வேகத்தில் செல்கின்றனா். குறிப்பாக அரசு பேருந்துகளில் தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றனா். இந்த காற்று ஒலிப்பான் சப்தத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

மேலும் சாலையை ஒட்டியுள்ள வங்கிகள் மற்றும் வா்த்தக நிறுவனங்களிலும் பணிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் இந்த அதிக சப்தத்தால் நிலைகுலைந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே போக்குவரத்து அதிகமாக இருக்கும் இந்த சாலையில் அசுர வேகத்தில் காற்று ஒலிப்பான்களை ஒலிக்க செய்து செல்லும் வாகனங்களில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com