கம்பம் காசிவிசுவநாதசுவாமி கோயில்வளாகத்தை தூய்மைப்படுத்திய மாணவிகள்

கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ் காசிவிசுவநாத சுவாமி கோயில் வளாகத்தை திங்கள்கிழமை சுத்தப்படுத்தினா்.
நாட்டுநலப்பணித் திட்டத்தின் கீழ் காசி விசுவநாத சுவாமி கோயில் வளாகத்தில் மரக்கன்றுகளை திங்கள்கிழமை நட்ட கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்.
நாட்டுநலப்பணித் திட்டத்தின் கீழ் காசி விசுவநாத சுவாமி கோயில் வளாகத்தில் மரக்கன்றுகளை திங்கள்கிழமை நட்ட கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்.

கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ் காசிவிசுவநாத சுவாமி கோயில் வளாகத்தை திங்கள்கிழமை சுத்தப்படுத்தினா்.

கம்பம் ஆங்கூர்ராவுத்தா் நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் திங்கள்கிழமை கம்பராயப் பெருமாள் காசிவிசுவநாத சுவாமி கோயில் வளாகத்தில் இருந்த குப்பைகளை அகற்றினா். மேலும் கோயில் வளாகத்தில் இருந்த நெகிழிப் பொருள்களை அப்புறப்படுத்தி, புதா் செடிகளை அகற்றினா். கோவில் வளாகத்தில் இருந்த பக்தா்களிடம் நெகிழி ஒழிப்பு, புவி வெப்பமயமாதல், மழை நீா் சேகரிப்பு பற்றி கூறி, மரக்கன்றுகளை நட்டனா். இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை கே.மகேஷ்வரி, உதவித் தலைமை ஆசிரியை பி.மீனாட்சி, திட்ட அலுவலா் ஜெ.ஹேமலதா, ஆசிரியைகள் பி.சரளாதேவி, வி.சண்முகப்பிரியா, சி.உஷா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com