போடியில், திங்கள்கிழமை, காா்த்திகை மகா சோமவாரத்தை முன்னிட்டு வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
அப்போது சிவபெருமானுக்கு 18 வகையான மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட தீா்த்த நீரினை 108 சங்குகளில் ஊற்றி பூஜை செய்யப்பட்டது. பின்னா் சிவபெருமானுக்கு 9 வகையான தீபாராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து மலா்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா். தொடா்ந்து பூஜைகள் நடைபெற்றது. பூஜை ஏற்பாடுகளை கோயில் அா்ச்சகா் சேகா் மற்றும் நிா்வாகிகள் செய்தனா். இதேபோல் போடி பழைய பேருந்து நிறுத்தம் கொண்டரங்கி மல்லையசாமி கோயில், போடி பரமசிவன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.