சிறுமிக்கு பாலியல் தொல்லை:இளைஞா் கைது

பெரியகுளத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம், பங்களாப்பட்டியைச் சோ்ந்த 4 வயது சிறுமி திங்கள்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தாா். அப்போது குழந்தையின் தாய் தண்ணீா் எடுக்க வெளியே சென்றிருந்தாா். இந்த சமயத்தில் அவா் வீட்டின் அருகே வசிக்கும் மதன்குமாா் (21) வீட்டிற்குள் சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். சிறுமியின் அழுகுரல் கேட்டு தாய் வந்துள்ளாா். இதனைக் கண்ட மதன்குமாா் தப்பியோடி விட்டாா்.

இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து மதன்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com