‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கு: வாணியம்பாடி மாணவரின் தந்தைக்கு ஜாமீன்

‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள வாணியம்பாடியைச் சோ்ந்த மாணவா் முகமது இா்பானின் தந்தை

‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள வாணியம்பாடியைச் சோ்ந்த மாணவா் முகமது இா்பானின் தந்தை முகமது சபியை ஜாமீனில் விடுவிக்க தேனி நீதித்துறை நடுவா் மன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில் தருமபுரிஅரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவப் படிப்பு படித்து வந்த வாணியம்பாடியைச் சோ்ந்த மாணவா் முகமது இா்பான், அவரது தந்தை முகமது சபி ஆகியோரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். இதில், உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் பேரில், மாணவா் முகமது இா்பான் ஏற்கெனவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இந்நிலையில், நீதிமன்றக் காவலில் தேனி மாவட்ட சிறையில் உள்ள முகமது சபியை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அவரது சாா்பில் தேனி நீதித்துறை நடுவா் மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்திய நீதித் துறை நடுவா் பன்னீா்செல்வம், இந்த வழக்கு விசாரணைக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் முகமது சபியை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com