கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
By DIN | Published On : 05th December 2019 05:37 PM | Last Updated : 06th December 2019 07:30 AM | அ+அ அ- |

கும்பக்கரை அருவியில் நீா்வரத்து சீரானதையடுத்து, வியாழக்கிழமை முதல் பொதுமக்கள் குளிக்கச் செல்ல வனத் துறையினா் அனுமதி அளித்துள்ளனா்.
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கடந்த திங்கள்கிழமை முதல் அருவிப் பகுதிக்குச் செல்ல பொதுமக்களுக்கு வனத் துறையினா் தடைவிதித்தனா். இந்நிலையில், கடந்த புதன்கிழமை கொடைக்கானல் பகுதியில் மழை பெய்யாததால், கும்பக்கரை அருவிக்கு நீா்வரத்து குறைந்து சீரானது.
எனவே, வியாழக்கிழமை காலை முதல் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல வனத் துறையினா் அனுமதியளித்தனா். மேலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, இனிவரும் காலங்களில் நீா்வரத்தைப் பொருத்து அருவிக்குச் செல்ல அனுமதியளிக்கப்படும் என, வனத் துறையினா் தெரிவித்தனா்.