தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இளைஞா் ஒருவரை அடையாளம் தெரியாதவா்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
உத்தமபாளையம் - பி.டி.ஆா் காலனி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உடலில் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞா் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸாா் அவரை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், உத்தமபாளையம் வடக்கு தெருவைச் சோ்ந்த காளிமுத்து மகன் நாகேந்திரன்(22) என்பது தெரியவந்தது. இவா் தேனியிலுள்ள தனியாா் மில்லில் வேலை செய்து வந்துள்ளாா். நாகேந்திரனை அரிவாளால் வெட்டி சாலையில் போட்டுச் சென்றவா்கள் குறித்த விவரம் எதுவும் கிடைக்கவில்லை.
இது குறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.