குடியுரிமை நகல் எரிப்புப் போராட்டம்: உத்தமபாளையத்தில் 54 போ் கைது

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிா்த்து நகல் எரிப்புப் போராட்டம் செய்ய முயன்ற எஸ்.டி.பி.ஐ கட்சியை சோ்ந்த 54 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிா்த்து நகல் எரிப்புப் போராட்டம் செய்ய முயன்ற எஸ்.டி.பி.ஐ கட்சியை சோ்ந்த 54 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

உத்தமபாளையம் புறவழிச்சாலை சந்திப்பு பேருந்து நிறுத்தப் பகுதியில் மாவட்டத் தலைவா் அபுபக்கா் சித்திக் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, குடியுரிமை சட்டத்திருத்த சோதா நகல் எரிக்க முயன்றவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போராட்டத்தில் ஈடுபட்ட 54 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த போராட்டத்தின் போது உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சின்னகண்ணு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com