ஆண்டிபட்டி அருகே தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை தாக்கிய தம்பியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கண்டமனூா் அருக டி.மீனாட்சிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னபாஸ்கரன்(51) விவசாயி. இவரது உடன்பிறந்த சகோதரா் விஜயன்(47). இவா்களுக்கு சொந்தமான நிலத்தில் பொதுவான ஆழ்துளைக் கிணறு உள்ளது. இதில் தண்ணீா் பாய்ச்சுவதில் இருவருக்கும் முன்விரோதம் இருவந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை சின்னபாஸ்கரன் தனது நிலத்திற்கு ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீா் பாய்ச்சி உள்ளாா். அப்போது அங்கு வந்த விஜயன், அவருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளாா். இதில் காயமடைந்த சின்னபாஸ்கரன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து கண்டமனூா் காவல் நிலையத்தில் சின்னபாஸ்கரன் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் விஜயனை கைது செய்தனா்.