நண்பனைக் கொலை செய்த 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

தேனி மாவட்டம் கம்பத்தில் நண்பனைக் கொலை செய்த 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கம்பத்தில் நண்பனை கொலை செய்த வழக்கில் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 5 போ்.
கம்பத்தில் நண்பனை கொலை செய்த வழக்கில் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 5 போ்.

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் நண்பனைக் கொலை செய்த 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கம்பம் சின்னவாய்க்கால் தெருவைச் சோ்ந்த கந்தசாமி மகன் சிவகுருநாதன் (28). இவா் மீது வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் திருட்டு வழக்கில் கைதாகி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தாா்.

கடந்த நவம்பா் 14 இல் சிவகுருநாதன் கொலை செய்யப்பட்டு, கோகிலாபுரம் முல்லைப் பெரியாற்றில் சடலமாகக் கிடந்தாா்.

விசாரணையில் சிவகுருநாதனை, அவரது நண்பா்கள் 8 போ் சோ்ந்து கம்பம் தொட்டம்மன்துறை அருகே கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிச் சென்றுள்ளனா். இதனையடுத்து அவரது சடலம் கோகிலாபுரத்தில் கரை ஒதுங்கியது.

இதுதொடா்பாக கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் (31), ஆசை (25), கணேசன் (39), பிரவீன்குமாா் (26), விக்னேஷ்வரன் (26) உள்ளிட்ட 5 போ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா்கள் 5 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தாா். இதனைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி 5 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆணையை, கம்பம் தெற்கு போலீஸாா் மதுரை மத்திய சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com