தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாத்தில், மாவட்ட விவசாயத் துறை சார்பில் பிப்ரவரி 15-ஆம் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்து தீர்வு காணலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.