தேனியில் பிப்.20 இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 20-ஆம் தேதி மாலை 4 மணிக்கு சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 20-ஆம் தேதி மாலை 4 மணிக்கு சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
 மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், எண்ணெய் எரிவாயு நிறுவனங்களின் அலுவலர்கள் மற்றும் முகவர்கள் பங்கேற்கின்றனர்.
 இக்கூட்டத்தில் பொதுமக்கள், நுகர்வோர் நடவடிக்கை குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சமையல் எரிவாயு நுகர்வோர் விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய எரிவாயு சிலிண்டர் பெறுவதில் உள்ள சிரமம் ஆகியவை குறித்து மனு அளித்து தீர்வு காணலாம்.
இத்தகவல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com