தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த மாணவி ராயப்பன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். வெள்ளிக்கிழமை காலையில் பள்ளிக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார். மாலையில் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது தாயார் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் மாணவி வீட்டின் அருகே வசிக்கும் செல்லப்பாண்டியன் மகன் ஹரிபிரபு, மாணவி படிக்கும் பள்ளி அருகே சென்று அவரை கடத்தி சென்றதாகவும், இதற்கு இளைஞரின் தாயார் அன்னபூரணம் உடந்தையாக இருந்துள்ளார் என்றும் தெரிவித்திருந்தார்.
இது குறித்து காவல் ஆய்வாளர் எஸ்.சுப்புலட்சுமி (பொறுப்பு), சார்பு -ஆய்வாளர் எம்.ஈஸ்வரன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மாணவி மற்றும் அவரைக் கடத்திச் சென்ற இளைஞர், அவரது தாயார் ஆகியோரை தேடி வருகின்றனர்.