தேனியில் இருசக்கர வாகனம் மோதி முதியவர் சாவு

தேனியில் செவ்வாய்க்கிழமை சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார்.

தேனியில் செவ்வாய்க்கிழமை சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (62). விவசாயி. இவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை தேனி - பெரியகுளம் புறவழிச்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். தனியார் அரிசி ஆலை அருகே செல்லும் போது, எதிரே வந்த இருசக்கர வாகனம், பன்னீர்செல்வம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இறந்தார். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com