தேனி மாவட்டம் கம்பம் பகுதிகளில் மாட்டுப் பொங்கல் விழா, திருவள்ளுவர் தினம் ஆகியவை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நந்தகோபாலன்தம்பிரான் மாட்டு தொழுவில் பட்டத்துக்காளையை பொதுமக்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
பின்னர் கோயில் தொழு மாடுகளுக்கு தீவனம் வழங்கினர். மேலும் காணிக்கையாக நாட்டு மாடு கன்றுகளை வழங்கினார்கள்.
இதில் கம்பம், க.புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, கூடலூர், ராயப்பன்பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.