பைக் மோதியதில் தந்தை, மகன் சாவு

மேட்டுப்பாளையம் அருகே பைக் மோதியதில் தந்தை, மகன் ஆகியோர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.


மேட்டுப்பாளையம் அருகே பைக் மோதியதில் தந்தை, மகன் ஆகியோர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (80). இவரது மகன் கனகராஜ் (40).
அதே கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (40). தேக்கம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்.
இந்நிலையில் இவர்கள் மூவரும் அப்பகுதியில் சாலையோரத்தில் நின்று ஞாயிற்றுக்கிழமை பேசிக் கொண்டிருந்தனர்.  அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த பிரேம் (22) என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் இவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மூவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் குழந்தைவேல், கனகராஜ் ஆகியோர் திங்கள்கிழமை உயிரிழந்தனர். இதுகுறித்து காரமடை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com