மதுக் கடைகளுக்கு எதிராக போராடிய வழக்குரைஞர் நந்தினியை சிறையில் இருந்து விடுக்க அரசை வலியுறுத்தி, பெண்கள் விடுதலைக் கழகம் சார்பில், மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவிடம் மனு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பெண்கள் விடுதலைக் கழக பொதுச் செயலர் தமிழரசி மற்றும் நிர்வாகிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், மதுவினால் சீரழிந்த குடும்பங்கள் சார்பாக மதுக் கடைகளுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வழக்குரைஞர் நந்தினியை அரசு விடுதலை செய்ய வேண்டும். அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.