தேனி அருகே பைக் விபத்தில் பெண் பலி
By DIN | Published On : 04th July 2019 07:43 AM | Last Updated : 04th July 2019 07:43 AM | அ+அ அ- |

தேனி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் செவ்வாய்கிழமை இரவு உயிரிழந்தார்.
உத்தமபாளையம், கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜமால் முகைதீன் மகன் முகமது ரபீக் ராஜா(34). இவர் தனது மனைவி ரெஜினாபேகம்(30) மற்றும் கைக்குழந்தையுடன் உத்தமபாளையத்தில் இருந்து தேனி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, கோட்டூர் அருகே தேனி-கம்பம் நெடுஞ்சாலையில் உள்ள வேகத் தடையில் இருசக்கர வாகனம் வேகமாக ஏறி இறங்கியது. இதில், ரெஜினாபேகம் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். இதில் அவர் தலையில் பலத்த காயமடைந்தார்.
ஆபத்தான நிலையில் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து வீரபாண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.