காரில் தோட்டாக்கள், வெடிபொருள்கள் பறிமுதல்: 5 பேர் கைது

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் வெடிபொருள்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, 5 பேரை  கைது செய்தனர்.
 கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள டி.காமக்காபட்டி சோதனைச்சாவடியில் செவ்வாய்க்கிழமை காலை போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஓட்டுநர் இருக்கை அருகே இருந்த பெட்டியில், எஸ்பிபிஎல் ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 20 தோட்டாக்கள், 2 பாக்கெட் கரு மருந்து, அரை கிலோ பால்ரஸ் குண்டுகள் இருந்தன. அவற்றை வயல்களுக்குள் வரும் விலங்குகளை விரட்ட அனுமதியின்றி எடுத்துச் செல்வது விசாரணையில் தெரியவந்தது. 
 இதனையடுத்து வெடிபொருள்கள் மற்றும் தோட்டாக்களை தேவதானப்பட்டி போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் அவற்றை கொண்டு சென்ற, கொடைக்கானலை சேர்ந்த அமல்ராஜ் (43), ஆரோக்கியதாஸ் (30), வீரச்செல்வம் (24), காளிமுத்து (24) மற்றும் வினோத் (எ) மரியதாஸ் (29) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com