பெரியகுளம் கௌமாரியம்மன் கோயிலில்  ஆனிப் பெருவிழா தொடக்கம்

பெரியகுளம் கௌமாரியம்மன் கோயிலில் ஆனிப் பெரு விழா திங்கள்கிழமை கொடியேற்றுத்துடன் தொடங்கியது.

பெரியகுளம் கௌமாரியம்மன் கோயிலில் ஆனிப் பெரு விழா திங்கள்கிழமை கொடியேற்றுத்துடன் தொடங்கியது.
       இவ்விழாவை முன்னிட்டு, கடந்த 2 ஆம் தேதி சாட்டுதல் மற்றும் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து,  திங்கள்கிழமை காலை கௌமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.      பின்னர், காலை 10 மணிக்கு கோயில் எதிரே அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில், இந்துசமய அறநிலையத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  ஜூலை 9 முதல் ஜூலை 17 ஆம் தேதி வரை அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
      முக்கிய விழாவான ஜூலை 16 ஆம் தேதி மாவிளக்கு உற்சவமும், ஜூலை 17 ஆம் தேதி அக்கினிச் சட்டி திருவிழாவும் நடைபெறுகிறது. ஜூலை 23 ஆம் தேதி மறுபூஜை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com