தேனி மின்வாரியச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஜூலை 16-ஆம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
தேனி மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், தேனி, போடி, ராசிங்காபுரம் ஆகிய துணை மின் நிலையங்கள் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு, மின் விநியோகத்தில் உள்ள குறைபாடுகள், புதிய மின் இணைப்பு பெறுவதில் உள்ள சிரமம் ஆகியன குறித்து மனு அளித்து தீர்வு காணலாம் என்று, தேனி மின்வாரியச் செயற்பொறியாளர் ந. கணேஷ்குமார் தெரிவித்துள்ளார்.