போடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கூலித் தொழிலாளி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.
போடி முந்தல் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பாண்டி மகன் கார்த்திக் (25). இவர், போடியில் உள்ள தனியார் மாங்காய் கிட்டங்கியில் வேலை செய்து வந்தார். வியாழக்கிழமை இரவு வேலை முடிந்து தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனே, அவரை போடி அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி கார்த்திக் உயிரிழந்தார்.
இது குறித்து போடி குரங்கணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.