கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு சேர்க்கை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
ஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் தேனி கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நிலையத்தில், கணினி மேலாண்மைப் பயிற்சி, நகை மதிப்பீட்டாளர் பயிற்சி ஆகிய பட்டயப் படிப்புகள் நடைபெறுகின்றன. இந்தப் பட்டயப் படிப்புகளில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 17 வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண்கள், தேனி கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நிலையத்தில் ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, இதில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. 
இதன்படி, கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் படிப்புகளில் சேர விரும்புவோர், ஜூன் 31-ஆம் தேதிக்குள் கல்விச் சான்றிதழ் மற்றும் மார்பளவு புகைப்படத்துடன், ஆண்டிபட்டியில் உள்ள தேனி கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நிலையத்தில் விண்ணப்பிக்கலாம்.
பட்டயப் படிப்பு பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்க உள்ளது என்று, தேனி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் சிவ. முத்துக்குமாரசாமி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com