தேனி துணை மின் நிலையத்தில் ஜூலை 17-ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
எனவே, அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை தேனி, பழனிசெட்டிபட்டி, உப்பார்பட்டி, தாடிச்சேரி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளர் ந.கணேஷ்குமார் தெரிவித்துள்ளார்.