பெரியகுளம் ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக விழா

பெரியகுளத்தில் அறம் வளர்த்த நாயகி உடனுறை ராஜேந்திரசோழீஸ்வரர் கோயில் வருடாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.


பெரியகுளத்தில் அறம் வளர்த்த நாயகி உடனுறை ராஜேந்திரசோழீஸ்வரர் கோயில் வருடாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.
வருடாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை விக்னேஸ்வர பூஜை மற்றும் புண்யாவாசனம், கலச பூஜை நடைபெற்றது. சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை மற்றும் திரவியாஹூதி நடைபெற்றது. அதன் பின்னர் காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் கலசங்கள் புறப்பாடாகி சுவாமிக்கு திரவியாபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் எல்.சசிதரன், திருப்பணிக்குழு உறுப்பினர் பி.சி.சிதம்பரசூரியவேலு மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com