மாடிப்படியிலிருந்து தவறி விழுந்த விவசாயி பலி

ஆண்டிபட்டி அருகே வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.

ஆண்டிபட்டி அருகே வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (56). விவசாயியான இவர், கடந்த மே 23-ஆம் தேதி வீட்டின் மாடிப்படியில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார்.  
இதுகுறித்து ராஜதானி போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com