தேனியில் ஜூன் 21இல் சமையல் எரிவாயு  நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாம் சார்பில் ஜூன் 21 ஆம் தேதி பிற்பகல் 4 மணிக்கு சமையல் எரிவாயு  நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாம் சார்பில் ஜூன் 21 ஆம் தேதி பிற்பகல் 4 மணிக்கு சமையல் எரிவாயு  நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில், எண்ணெய் எரிவாயு நிறுவனங்களின் அலுவலர்கள் மற்று முகவர்கள் பங்கேற்கின்றனர். 
பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் நடவடிக்கை குழு பிரதிநிதிகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு, சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய எரிவாயு உருளை இணைப்பு பெறுவதில் உள்ள சிரமம் ஆகியவை குறித்து மனு அளித்து தீர்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com