தேனி மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் தானியங்கி மின் தடை நீக்கும் மையம் சனிக்கிழமை (ஜூன் 15) முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.
இது குறித்து தேனி மின் வாரிய பொறியாளர்கள் கூறியது:
தேனி மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் அரசு உத்தரவின்படி, ரூ.25.52 லட்சம் செலவில் தானியங்கி மின் தடை நீக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம் மையம் 24 மணி நேரமும் செயல்படும்.
மின்நுகர்வோர் கட்டணமில்லா தொலைபேசி எண்-1912 இல் தொடர்பு கொண்டால், அவர்களது மின் இணைப்பில் ஏற்படுள்ள தடை குறித்த விபரம் கணினியில் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட மின் கம்பியாளருக்கு தெரிவிக்கப்பட்டு குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும். இந்த சேவை ஜூன் 15 ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வருகிறது என்றனர்.