உலக நன்மை வேண்டி பெரியகுளத்தில் 14 மணி நேரம் பிரார்த்தனை

பெரியகுளம் நாமத்துவார் பிரார்த்தனை மையத்தில் உலக நன்மை வேண்டி திங்கள்கிழமை 14  மணி நேரம் தொடர்ந்து பிரார்த்தனை  நடத்தப்பட்டது.

பெரியகுளம் நாமத்துவார் பிரார்த்தனை மையத்தில் உலக நன்மை வேண்டி திங்கள்கிழமை 14  மணி நேரம் தொடர்ந்து பிரார்த்தனை  நடத்தப்பட்டது.
ஆடி பௌர்ணமியை முன்னிட்டு, பெரியகுளம் நாமத்துவார் பிரார்த்தனை மையத்தில் எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டியும், மழை வளம் வேண்டியும், திங்கள்கிழமை அதிகாலை முதல் மாலை வரை பிரார்த்தனை நடைபெற்றது.
     இதை முன்னிட்டு, மாதுரி  சகீ சமேத பிரேமிக வரத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை, குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவினிடி இந்தியா டிரஸ்ட்டை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com