உத்தமபாளையம் பகுதியில் புதன்கிழமை (ஜூன் 19) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், அனுமந்தன்பட்டி, ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, வாய்க்கால்பட்டி, உ.அம்மாபட்டி, உ.அம்பாசமுத்திரம், கருவேலம்பட்டி, கருக்கோடை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.