சாலை விபத்தில் காயமடைந்த பெண் பலி

தேனி மாவட்டம் கம்பத்தில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் கம்பத்தில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
கம்பம் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் திருமலை மனைவி சரசுவதி (46). கூலி தொழிலாளியான இவர் கடந்த சனிக்கிழமை கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை சந்திக்க பக்கத்து வீட்டில் குடியிருக்கும் முருகன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பின்பக்கம் அமர்ந்து சென்றுள்ளார். மச்சள்குளம் தனியார் பள்ளி அருகே சென்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு செவ்வாய்க்கிழமை இறந்தார். இதுகுறித்து வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அண்ணாதுரை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com