தேனி மாவட்டம், கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி பெண்கள் கல்லூரியில், சர்வதேச யோகாதின நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இக்கல்லூரியில் உள்ள கல்பனா சாவ்லா கலையரங்கத்தில் நடைபெற்ற இப்பயிற்சியில், கல்லூரி நிறுவனரும், கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான என். ராமகிருஷ்ணன் யோகாசனம் பற்றி விளக்கமளித்து தொடக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஜி. ரேணுகா வாழ்த்திப் பேசினார்.
இதில், சிறந்த முறையில் யோகாசனம் செய்த மாணவிகளுக்கு, கல்லூரி நிர்வாகத்தினர் பரிசுகள் வழங்கினர்.
முன்னதாக, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ரா. தமிழ்ச்செல்வி வரவேற்றார். நாட்டு நலப்பணித் திட்ட உதவி அலுவலர் டி. ரேணுகா நன்றி கூறினார்.