தனிப்பிரிவு போலீஸார் திடீர் இடமாற்றம்

சருத்துப்பட்டி கலவரம் தொடர்பாக தனிப்பிரிவு காவலர்களின் தகவல் பரிமாற்றத்தில் குறை ஏற்பட்டதால், ராயப்பன்பட்டி மற்றும்

சருத்துப்பட்டி கலவரம் தொடர்பாக தனிப்பிரிவு காவலர்களின் தகவல் பரிமாற்றத்தில் குறை ஏற்பட்டதால், ராயப்பன்பட்டி மற்றும் சின்னமனூர் காவல் நிலையங்களில் பணியாற்றிய தனிப்பிரிவு போலீஸார் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனர்.
தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு காவலராகப் பணியாற்றிய உதயக்குமார், சின்னமனூர் காவல் நிலையத்துக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதேபோல், சின்னமனூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய ராஜா, ராயப்பன்பட்டி காவல் நிலைய தனிப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இவர்கள், செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com