கம்பம் நகராட்சிப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தார்ச்சாலை பணியை, மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்யவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், கம்பம் நகராட்சிப் பகுதியில் நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், தார்ச் சாலை புதுப்பிக்கும் திட்டம் மூலம் வனச்சரகர் அலுவலக சாலையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இந்த சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். மேலும், ஏற்கெனவே இச்சாலை நன்றாக இருந்ததாகவும், தற்போது அமைக்கப்படும் வரும் சாலையில் கற்கள் பெயர்ந்து வருவதாகவும் கூறுகின்றனர்.
எனவே, மாவட்ட ஆட்சியர் நேரிடையாக ஆய்வு செய்து, தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.