தேனி ஆட்சியர் அலுவலகம் முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: 25 பேர் கைது

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ் புலிகள்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த 25 பேரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
   சோலைத்தேவன்பட்டியில் ஆதி திராவிடர்கள் காலனிப் பகுதியில் குடிநீர், தெரு விளக்கு, பொது சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் அலெக்ஸாண்டர் தலைமையில் நிர்வாகிகள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அலெக்ஸாண்டர் உள்ளிட்ட 25 பேரை தேனி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com