வருவாய் கோட்டாட்சியரிடம்  அதிமுக வேட்பாளர் மனு

மறுவாக்கு பதிவு நடக்கும் வாக்குசாவடிக்கு கூடுதல் பாதுகாப்புக் கோரி பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதி

மறுவாக்கு பதிவு நடக்கும் வாக்குசாவடிக்கு கூடுதல் பாதுகாப்புக் கோரி பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மு.மயில்வேல், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ச.ஜெயப்பிரித்தாவிடம் புதன்கிழமை மனு அளித்தார்.               
அதில், பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வடுகபட்டி , 197 வது எண் கொண்ட சங்கரநாராயணன் பள்ளியில் மறு வாக்குபதிவு இம்மாதம் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த வாக்கு சாவடியில் எதிர்கட்சிகள் சதி செய்து வாக்குப் பதிவை சீர்குலைக்கக் கூடும்.
எனவே,  அந்த வாக்குசாவடிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், வாக்கு எண்ணிக்கையின் போதும், வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com