முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
வாகன காப்பீட்டு முகவர் வீட்டில் நகை, பணம் திருட்டு
By DIN | Published On : 18th May 2019 06:57 AM | Last Updated : 18th May 2019 06:57 AM | அ+அ அ- |

போடியில் வாகன காப்பீட்டு முகவர் வீட்டில் நகை, பணம் ஆகியவற்றை வியாழக்கிழமை இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
போடி சடையாண்டி நகரைச் சேர்ந்தவர் சன்னாசி (44). இவர் வாகன காப்பீட்டு முகவராக பணிபுரிந்து வருகிறார். வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு வழக்கமாக சாவியை வீட்டின் கதவு அருகே மறைவிடத்தில் வைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டாராம்.
மாலையில் வந்து வீட்டை திறந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த மூன்றரை பவுன் தங்க நகை மற்றும் ரொக்கப் பணம் ரூ.20 ஆயிரம் ஆகியவை திருடு போயிருந்தது தெரிந்தது.
இதுகுறித்து சன்னாசி அளித்த புகாரின் பேரில் போடி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.