ஆண்டிபட்டி அருகே பெண்ணிடம் தகராறு: ஒருவா் கைது

ஆண்டிபட்டி அருகே பெண்ணிடம் தகராறு செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே பெண்ணிடம் தகராறு செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கீழமுத்தனம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன் என்பவரின் மனைவி ரேவதி(35). இவா் திங்கள்கிழமை காலை தோட்டத்து வேலைக்காக நாச்சியாா்புரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது முத்தனம்பட்டியைச் சோ்ந்த ராஜ்குமாா் (38) என்பவா் ரேவதியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டதாகவும், மேலும் அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து க.விலக்கு காவல் நிலையத்தில் ரேவதி புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸாா் ராஜ்குமாரை கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com